4.மரங்களின் சுற்றம்
- கவிஞர் இன்குலாப்
முன்னுரை
கவிஞர் இன்குலாப் “மரங்களின் சுற்றம்” என்ற தலைப்பில் மனித உறவுகளை விட மரங்களின் உறவு மிக மேலானது என்பதை விவரிக்கிறார். மரங்களின்
மேன்மையையும் , அதனால் பிறர்க்கு பயனேயன்றி, தீங்கு சிறு
துளியும் இல்லை என்பதையும் அழகாக விளக்கியுள்ளார்.
சந்திக்க
செல்வதில்லை
மனிதர்களைப் போல் ஒரு மரம் மற்றொரு
மரத்தை சென்று சந்திக்க செல்வதில்லை. ஆனால் தனியாக நிற்பது போல் தோற்றம் தந்து பல
உறவினர்களையும் கொண்டிருப்பது மரங்களால்
மட்டுமே இயலும்.
மரங்களின்
சுற்றம்
·
மரங்களின் இலைகளிலும் தளிர்களிலும் எறும்புகள் ஊறுகின்றன.
·
பூக்களில் வண்ணத்துப் பூச்சிகளும் வண்டு, தேனீ, போன்றவை
தேன் பருகும்.
·
மரத்தின் காய், கனிகளை, கிளிகள் சிறகுகள் போர்த்திக் கொண்டு சுவைக்கும்.
·
அடிமரத்தில் தளிர்கள் தலை நீட்டும். அம்மரத்தில் குயில்கள் அழகாக ஆனந்தமாக கூவும்.
·
குடைபோன்ற பெரிய மரத்தில் கொசுக்களும் பூச்சிகளும் கொண்டாட்டம் போடும்.
·
உலர்ந்து போய் பட்டு போன மரத்தின் பொந்தில் ஆந்தைகள் முட்டையிட்டு
வைத்திருக்கும்.
இவ்வளவு சுற்றங்களையும் கொண்டிருப்பது மரங்களால் மட்டுமே இயலும்.
முடிவுரை
மரத்தினால் மனிதர் மட்டுமல்ல எறும்பு,
பூச்சிகள் , கிளி, குயில் இளைப்பாறும் விலங்குகள் என ஏராளமானோர் பயன்
அடைகின்றனர்.
இதன் கிளையடியில் தேன் கூடு கட்டும், கிளைகளின் மேலே பறவைகள் கூடு கட்டும்.
என
ஏராளம் சுற்றமும் நட்பும் நடமாடாமல் பெறுவது மரங்களால் மட்டுமே முடியும்.
No comments:
Post a Comment