Monday, September 7, 2015

திருக்குற்றாலக் குறவஞ்சி

2.  திருக்குற்றாலக் குறவஞ்சி

முன்னுரை:
திருக்குற்றாலக்குறவஞ்சியின் ஆசிரியர் திருக்கூடராசப்பக் கவிராயர் ஆவர். இந்நூல் குறவஞ்சி நூல்களுள் தனித்தன்மை வாய்ந்த ஒன்று.
நூற்குறிப்பு :- உங்கள் செய்யுள் புத்தகத்தில்….
 பாடல் எண் : 1: மலைவளம் கூறுதல்
                        குறத்தி தலைவியிடம் குறவர்கள் வாழும் திரிகூட மலையாகிய திருக்குற்றால மலையின் வளங்களைக் கூறுகிறாள்.
  வானுயர் தோற்றம்:-
 திரிகூடமலையில் தம் இனத்தோடு கூடிவாழும் ஆண் குரங்குகள் அம்மலையில் விளையும் பலவகையான பழங்களைப் பறித்து வந்து தத்தம் பெண் குரங்குகளுக்கு அன்புடன் கொடுத்து அவற்றோடு கொஞ்சி விளையாடும். அப்பெண்குரங்குகள் சாப்பிட்டு எறிந்த மிச்சில் பழங்களைப் பெற தேவர்களும் ஏங்கி நிற்பர். அம்மலையில் வாழும் வேடவர்கள் தம் பார்வையாலேயே தேவர்களையும் தம்மிடம் வரும்படி அழைப்பர்.
வான் வழியே செல்லும் ஆற்றல் படைத்த சித்தர்கள் அம்மலையில் காய சித்திக்கான மூலிகைகளை விளைவிப்பார்கள்தேனருவி போன்ற அருவியின் அலைகள் கரையைக் கடந்து வான்வழியே தரையில் ஒழுகும்அம்மலை மீதாக வானிற் செல்லும் சூரியனுடய தேர் சக்கரமும் அதில் பூட்டப்பட்ட குதிரைகளின் கால்களும் வழுக்கிச் செல்லும் . கூனல் இளம் பிறையை அணிந்துள்ள சடை முடியை உடைய சிவபெருமான் வீற்றிருக்கக் கூடிய திரிகூட மலை எங்கள் மலை என்று கூறுகிறாள் .
பாடல் எண் : 2 :  குறவர் வாழ்க்கை:-
திரிகூட மலை குறவர்க்குரிய மலையாகும். அம்மலையில் ஒலிக்கும் அலைகளையுடைய அருவிகள், கழங்கு (கல்லாங்காய்) ஆடுவதுபோல் பெரும் முத்துக்களைத் தம் இருபுறங்களிலும் வீசிச் செல்லும். அந்த அலைகள் வீடுகளின் முற்றங்கள் தோறும் ஓடிச்சென்று சிறு பெண்கள் விளையாடுவதற்காக கட்டிய சிறிய வீடுகளைச் சிதைத்துச் செல்லும்.
 அம்மலையில் வாழும் குறவர்கள் கிழங்குகளைத் தோண்டி எடுத்தும், தேனடை களிலிருந்து தேனெடுத்தும், அம்மலையின் வளத்தைப் புகழ்ந்து பாடி ஆடி மகிழ்வர். யானையின் தந்தங்களை ஒடித்து அவற்றையே உலக்கைகளாகக் கொண்டு காய்ந்த தினையை மாவாய் இடிப்பர். அம்மலையில் பெரிய குரங்குகள் சுவைமிகுந்த மாங்கனிகளையே பந்தாகக் கொண்டு விளையாடும்.
ஓங்கி வளர்ந்துள்ள சண்பக மரங்களின் மலர்கள் தேவலருகிலும் சென்று மலர்ந்து மணம் பரப்பும். அடியார்களுக்கு வேண்டுவன வழங்கும்  அருட்கொடையாளர், பேரரசர், குறும் பலா மரத்தடியில் எழுந்தருளியிருப்பர்.
இவ்வளவு வளம்பெருகக் கூடிய மலையாகிய திரிகூட மலை எங்கள் மலையே என்று கூறுகிறாள் .

No comments:

Post a Comment