1. கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார்
போர்
பாடியது - கிபி. 11 ஆம் நூற்றாண்டில் சோழன் குலோத்துங்கன்
கலிங்க நாட்டின் மீது படையெடுத்து போர் புரிந்ததைச் சிறப்பித்து கூறு பகுதியாக
போர் பாடியது என்ற பகுதி அமைந்துள்ளது.
போர்த்தொடக்கம்
சோழர் படையினரும் கலிங்கர் படையினரும்
குதிரைப் படைகளையும் யானைப் படைகளையும் ஏவிப் போர் புரியத் தொடங்கினர். இருதிறப்
படையினரும் போர் தொடங்குங்கள் போர்தொடங்குங்கள்! என்று உரத்துக் கூவும் போரின்
ஓசையானது கடல் ஒலியையும் வென்றது! பகைவர் மேல் குதிரைப் படையை ஏவுங்கள் ஏவுங்கள்!
ஏவுங்கள். யானைப்படைகளை விடுங்கள்! விடுங்கள்! விடுங்கள்! என்று வீரர்கள் உரைக்கும்
ஓசையும் மிகுதியால் உண்டாயிற்று.
போரின்
பேரொலி
வீரர்கள் ஆரவாரித்தலாகிய போரில்,
அவர்களுக்குள்ள ஆவலாலும் ஆண்மையாலும் , யாவரும் அஞ்சும்படி, வில்லிருந்து
வேகத்தோடு துள்ளி விழுந்த நாண் ஓசையால் , பொருந்திய திக்குகளாகிய இடங்கள் பிளந்தன. போர்க்களத்தில் அவரவர்கள் ஆரவாரித்தலாகிய ஒப்பற்ற முழக்கத்தால் உலகங்கள்
செவிடுபட்டன!
இருபடைகளும்
கலந்தமை
சோழர் படைகளும் கலிங்கர் படைகளும்
ஒன்றை ஒன்று நேரில் எதிர்த்தது, அலைமோதும் கடலுடன் மற்றொரு கடல் எதிர்த்தாற்போல
இருந்தது! போரில் சீறிவரும் குதிரைகளுடன் போர் புரிவது கடலில் சுருண்டு விழும்
அலைகளுடன் அலைகள் போர் புரிதலைப் போன்று இருந்தது.
யானைப்
படையும் குதிரைப்படையும்
மதம் பொழியும் யானைகளோடு யானைகள் போர்
புரிவது பெரிய மலைகளோடு மலைகள் போர் புரிவது போல் இருந்தது. தேர்களோடு தேர்கள்
எதிர்த்துப் போர் புரிவது, மேகக் கூட்டங்களோடு மேகங்கள் எதிர்ந்துப் போர் புரிவது
போல் இருந்தது.
வீரர்களும்
அரசர்களும்
தாக்கும் புலிகளோடு புலிகள் ஆரவாரித்துப் போர் புரிவது போல், போர் புரியும் வீரர்களோடு வீரர்கள் ஆரவாரித்துப் போர் புரிந்தனர். சிங்கங்களோடு சிங்கங்களின் கூட்டம் போர் புரிவது போல, அரசர்களோடு அரசர்கள் போர் புரிந்தனர்.
No comments:
Post a Comment